Thursday 12 December 2013

அம்மா

என் அம்மாவும் அப்பாவும் காசி சென்று திரும்பி வந்தார்கள்... அவர்களை அழைத்து வர ரயில்வே நிலையம் சென்றிருந்தேன்... ரயிலில் இருந்து இறங்கியவுடன் என் அம்மா அப்பாவின் கையை பிடித்து என் கையில் குடுத்துவிட்டு ஒரு மாதிரி கண் கலங்க நின்றார்கள்.. எனக்கு ஒன்றுமே புரியவில்லை..என் கணவர் இருந்ததால் என் அம்மா எதுவும் பேசவில்லை....

பின் வீட்டிற்கு வந்தவுடன் இருவரும் குளித்துவிட்டு சாப்பிட்டு அப்பா வந்த அசதியில் தூங்க....நானும் அம்மாவும் சற்று நேரம் பேசினோம்...சற்று நேரத்திற்கு எல்லாம் அம்மா அழ ஆரம்பிக்க என்னம்மா என கேட்க ...

அப்பாக்கு காசியில் ஜுரம் வந்துவிட்டது....பாசை தெரியாத ஊரில்  என்ன தான் நம் ஊர்காரர்கள்  நிறைய பேர் இருந்தாலும் என்னால் தாங்க முடியவில்லை...ஹாஸ்பிடலில் காண்பித்து ட்ரீட்மென்ட் எடுத்து தங்கியிருக்கும் இடம் வர எல்லோரும் கோவில், கடை என செல்ல தனிமை ரொம்ப பயமுறுத்தியது.... அம்மா எனக்கு போன் செய்ய முயல அப்பா கூடவே கூடாது.... கமலிக்கு தெரிஞ்சா ரொம்ப பயப்புடுவா அதனால் ஒன்னும் சொல்லாத.... எனக்கு சரி ஆயிடும்... யாருக்கும் சொல்லாதே என சொல்ல...என் அம்மா தனித்து ஏகப்பட்ட மன கஷ்டத்துடன் அப்பா சரி ஆகும் வரை இருக்க.. அங்கு எங்கள் ஊர்காரர் ஒருவர் கயாவில் தொலைந்து இரண்டு நாட்கள் கழித்து வேறு யாரோ முகம் தெரியாதவரின் உதவியுடன் இவர்களை அடைய இவர்களை பார்த்தவுடன் அந்த அம்மா கதறி அழுது அப்பா என்னை ஊர்ல கொண்டு பத்திரமா சேர்துடுடா என  சொல்ல என் அம்மாவின் பயம் அதிகமாகி இருக்கிறது ...

ஓரு வழியாக அவர்கள் காசியில் இருந்து கல்கத்தா வர... இரயிலில் இவர்களுடன் பயணம் செய்த ஒரு பெண்மணி இரயிலில் இறந்த்விட்டார்... அவர் கணவர் ஐயோ என்ன ஊர்னு கூட தெரியலையே இங்க  வந்தா உயிர் போகணும்..... நான் இனிமே என்னடி பண்ணுவேன் ... உன் பையன் பொண்ணு கேட்டா நான் என்னடி சொல்றது என்று அந்த பெண்ணின் கணவர்  ட்ரைன்னில் கதற... என் அம்மா அரண்டு விட்டார்கள்..... காசி முடித்து எல்லோரும் ராமேஸ்வரம் செல்வதாக ஏற்பாடு.... என் அம்மா சம்ப்ரதாயம் பார்ப்பர்கள் ... ஆனால் அங்கு நடந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் என் அம்மாவை உலுக்கி  போட்டுள்ளது....இந்த பத்து நாட்கள் தனிமையில் அவர்கள் சேர்த்து வைத்த துக்கம், அழுகை, பயம்  புரிந்து என் அம்மாவின் கையை பிடிக்க சிறிது நேரம் அழுது தீர்த்தார்கள்.........

அப்பாக்கு உடம்பு முடியாம போனோன ரொம்ப பயந்துட்டேன்டி...எதாவது ஒன்னுனா கங்கைலையே நானும் விழுந்து போய் சேர்ந்துடுனும்னு நினைச்சேன்டி என அழ....என் அம்மாவின உணர்வு புரிந்து ஒன்னும் இல்லம்மா  விடு என்று சொல்லும்போதே கண்ணீர் உடைப்பெடுக்க.....சில பல நேரங்களில் கண்ணீர் மட்டுமே உணர்வுகளை வெளி கொணர்வதை நமக்கு பெரும் ஆறுதலாக இருப்பதை உணர முடிந்தது ......

No comments:

Post a Comment