Thursday 12 December 2013

அப்பார்ட்மெண்ட் அலப்பரைகள்

நாடுகளுக்கு இடையில் மட்டுமா எல்லைகோடுகள்
மொட்டை மாடியில் 

துணி காய வைக்கும் கொடிகளுக்கும்
பொருட்கள் காயவைக்கும் இடத்திற்கும் கூட
எல்லை கோடுகள் உண்டு..
எல்லை தாண்டி வருவது வரவேற்கப்படுவதில்லை இங்கும்

அனைவருக்கும் முகங்கள் பரிச்சியம்
தினமும் பார்ப்பதால் 
பார்த்தவுடன் உதட்டில் நெளியும் 
சிரிப்பும் பரிச்சியம் 
நாகரிகம் என்பதால் 
ஆனால் பெயர் தான் பரிச்சியமில்லை .........

மழை தான் பெய்கிறதோ 
என்று ஆவலுடன் ஜன்னலை 
எட்டிபார்க்க வைக்கின்றன
ஏ.ஸி களில் இருந்து சொட்டும் நீர்...

பத்திரிக்கைகார்களுக்குள் ஒற்றுமை உண்டோ இல்லையோ
விசிறி அடிக்கப்படும் பத்திரிகைளில் 
எதிர் பிளாட் ஹிந்துவும், தந்தியும் 
என் வீட்டு டைம்ஸ் ஆப் நொவ்வும், தினமலரும்
ஒற்றுமையாக கலந்து கிடக்கும்....

வாய்க்கால் வரப்பு தகராறு
என்னவென்று தெரியாத 
இன்றைய தலைமுறையினருக்கு..
அது தான் பார்க்கிங் தகாராறாக 
உருமாற்றம் அடைந்துள்ளது
என்று சொல்லாமல் சொல்லும் பெரியவர்கள்

No comments:

Post a Comment