Thursday 12 December 2013

லவ் யூ

சில வருடங்கள் முன் நான் வேலைக்கு வந்த புதிதில் ஒருவர் வந்து என்னிடம் ஐ லவ் யூங்க என்றார் நான் சரிங்க என்று சொல்ல அவர் சற்று தடுமாறினார்..அதன் பின் நான் என் வேலையை கவனிக்க நான் உண்மையாவே லவ் பண்றேங்க அப்படின்னு சொன்னார்...நானும் சரிங்க என்று சொல்லிவிட்டு என் வேலையை பார்க்க மேடம் நீங்க ஒண்ணுமே சொல்லலையே என்று கேட்டார்...நான் என்னங்க சொல்ல முடியும் யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் லவ் பண்ணலாம் இதெல்ல்லாம் உங்க உரிமை என்று சொல்ல அவரால் மேலே பேச்சை தொடர முடியாமல் திணறினார்...

நீங்க யாரையாச்சும் லவ் பண்றீங்களா என்று கேட்டார்..நான் நிறைய பேரை லவ் பண்றேன் அதை தெரிஞ்சுக்கிட்டு நீங்க என்ன பண்ண போறீங்க என்று கேட்டேன்..அப்ப என்னை லவ் பண்ண மாட்டீங்களா என்று கேட்க நான் அவரிடம் லவ் அப்படின்னா என்னங்க என்று கேட்க? உயிருக்கு உயிராய் நேசிப்பது லவ் என்றார்...அப்படின்னா சாகற வரைக்குமா என்று கேட்க அவர் ஆம் என்றார்...சரி அப்படின்னா யார் சாகிற வரைக்கும் என்றேன்...சிறிது முழித்து பின் நான் சாகிற வரை என்று சொன்னார்....ரொம்ப சந்தோசம் அப்படியே செய்ங்க என்று சொல்ல நீங்க நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லலை என்று முறைக்க நான் அவரிடம் என்னை உயிருக்கு உயிராய் நேசிப்பதாக நீங்க தான் சொன்னீங்க...சாகிற வரைக்கும் நேசிங்க எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை அப்படின்னு சொல்லிட்டு சிரித்துவிட்டு சென்று விட்டேன்...

1 comment:

  1. என்னம்மா -- இப்படி பண்ணிடீங்களே -- காதல் என்பது மென்மையான இனிமையான உணர்வல்லவா ? பாவம் அவர் இடிந்தே போயிருப்பார் .

    ReplyDelete